Monday, May 28, 2018

திருமண நன்றி நவிலல் : பரணிதாசன் - காயத்திரி

மட்டக்களப்பு நேச ஒழுங்கை முத்துலிங்கம் இராசமணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் பரணிதாசனுக்கும் கண்டி அம்பக்கோட்டை நடராசா மகேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வி காயத்திரிக்கும் கடந்த புதன்கிழமை (16.05.2018) மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடந்தேறிய திருமாங்கல்யதாரணத்திலும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சப்பல் வீதி வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்திலும் கலந்து மணமக்களை மனமார வாழ்த்தியவர்கள் மற்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.05.2018) கண்டி திகண விலேஜ் றிசோட்டில் நடைபெற்ற வரவேற்பு விருந்துபசாரத்திலும் கலந்து மணமக்களை மனதார வாழ்த்தி இத்திருமண வைபவத்தை சிறப்புற வைத்த அனைத்து நல் உள்ளங்களான உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

திருமாங்கல்யதாரண சடங்கினை சிறப்புற நடாத்தி வைத்த சிவஸ்ரீ மகேந்திரநாதன் குருக்கள், அவரின் உதவியாளர் கொழும்பு சுப்பையா ஆச்சாரி, மாமாங்கேஸ்வரர் ஆலய தர்மகத்தா சபையினர் மற்றும் வில்லியம் ஓல்ட் மண்டப பணிப்பாளர்சபை அதன் ஊழியர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

நன்றி

இவ்வண்ணம்

திரு. பெ. முத்துலிங்கம் ஆச்சாரி குடும்பம் (அகில இலங்கை சமாதான நீதவான், ஓய்வுபெற்ற சிரேஷ;ட கணக்காளர்) இல: 12, நேச ஒழுங்கை மட்டக்களப்பு

திரு திருமதி நடராசா ஆச்சாரி குடும்பம் இல: 8ஃ5, அம்பாக்கோட்டை, கென்கல்ல, திகண, கண்டி